tamilnadu

img

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நிவாரணப்பொருட்கள் வழங்கல்

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த அதிகத்தூர் தண்டலம் பகுதி நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 76 குடும்பத்தினர், இருளர் சமூகத்தினர் உள்ளிட்டு 200 குடும்பத்தினருக்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன. பொருட்களை  மாநில பொதுச்செயலாளர் இரா.தாஸ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுக்க தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.