திருவள்ளூர், மே 9- ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டத்தின் மூலம் அழகுக்கலை, தையல், மொபைல், வீட்டு உபகரணங்கள், கால்நடை வளர்ப்பு, பாலில் இருந்து நெய் எடுக்கும் முறை போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், நாமக்கல், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் உள்ள மிகவும் நலிவடைந்த பெண்களுக்கு தனியார் நிதி நிறுவனத்தின் உதவியுடன் ஒரு வருடத்திற்கு பயிற்சி வழங்க உள்ளனர்.இந்நிறுவனத்தின் நிர்வாகிகள் ராபர்ட், ஜெயக்குமார், செல்லதுரை, ஜெயபிரகாஷ் ஆகியோர் கூறுகையில், ‘பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு சமூகத்தில் மேலும் உயர்ந்து நிற்க இந்த பயிற்சி அமையும்’ என்றனர்.