tamilnadu

டீசல் நிரப்பும் போது உடலில்  தீப்பற்றியதில் ஒருவர் காயம்

திருவள்ளூர்,பிப்.22- திருவள்ளூர் அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் டீசல் நிரப்பும் போது ஒருவரின் உடலில் திடீரென தீப்பற்றியதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.  செம்பரம்பாக்கம், பாப்பன்சத்திரத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கண்டெய்னர் லாரிக்கு டீசல் நிரப்பும் போது அங்கிருந்த ஒருவரின் உடலில் திடீரென மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதில், பலத்த காயமடைந்த அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர் குறித்து பெட்ரோல் பங்கில் உள்ள கண்காணிப்பு கேமராவில், போலீஸார் விசாரணை நடத்துகையில், அவர், உ.பி.யை சேர்ந்த ஓட்டுநர் ராஜேஷ்குமார் சிங் என்பது தெரிய வந்தது.  ராஜேஷ்குமார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.