திருவள்ளூர், ஜூலை 15- தலித் பெண்ணை தற்கொலைக்கு தூண்டி யவர்கள் மீது ஒருவாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருத்தணி துணை கண்காணிப்பாளர் உறுதி அளித்துள்ளார். திருவாலங்காடு அருகில் உள்ள நல்லாட்டூ ரில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த மணி மேகலையும் (24), தாழவேடு கிராமம் பிற்படுத்தப் பட்ட சமூகத்தை சேர்ந்த ராஜ்குமாரும் காதலித்து வந்தனர். ஆனால், மணிமேகலையை திருமணம் செய்து கொள்ள ராஜ்குமார் மறுத்துள்ளார். திருமணத்திற்கு வற்புறுத்திய மணிமேக லையை, ராஜ்குமாரின் குடும்பத்தினர் தாக்கி, அவதூறாக பேசி அவமானப்படுத்தியுள்ளனர். இத னால் மன உளைச்சல் அடைந்த மணிமேகலை ஜூன் 16ந் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும், தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யினர் ஜூன் 23ந் தேதி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
முற்றுகை
இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் புதனன்று (ஜூஐல 15) திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அதன் பின்னர் ஊர்வலமாக சென்று திருத்தணி காவல்துறை துணை கண்காணிப் பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மணிமேகலை தற்கொலைக்கு காரண மான ராஜ்குமார், அவரின் தாயார், சகோதரி, மாமா மற்றும் ராஜ்குமாருக்கு ஆதரவாக செயல் பட்ட திருத்தணி காவல்நிலைய உதவி ஆய்வா ளர் சுதாகர் ஆகியோரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
வாக்குறுதி
இதன் பின்னர் தலைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய துணை கண்காணிப்பா ளர் சேகர், அடுத்த ஏழு நாட்களுக்குள் சம்பந் தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னணி மாவட்ட குழு உறுப்பினர் ரீசர் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் இ.மோகனா, மாவட்ட செய லாளர் த.கன்னியப்பன், தலைவர் இ.எழிலர சன், துணைத் தலைவர் ஏ.ஜி.கண்ணன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் ஏ. அப்சல் அகமது, மாவட்டக்குழு உறுப்பினர் வி.அந்தோணி, வட்ட குழு உறுப்பினர் சம்பந்தம், கிளை செயலாளர் பொற்கொடி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள், தலித் மக்கள் முன்னணி, பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.