tamilnadu

img

மேலூர் - வல்லூர் சாலையை இரு வழிப்பாதையாக மாற்றுக தொழிலாளர்கள் - பொதுமக்கள் வலியுறுத்தல்

திருவள்ளூர், அக்.6- வடசென்னை அனல் மின் நிலையம், காமராஜர் துறைமுகம், கடல்நீரை குடி நீராக்கும் திட்டம், ஐஓசிஎல், பிபிசிஎல், எச்பிசிஎல், சிகால் யார்டு  போன்ற தொழி ற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள்  தினந்தோறும்  மீஞ்சூரை அடுத்த மேலூரிலிருந்து வட சென்னை அனல் மின் நிலையம் செல்லும் சாலையை பயன்படுத்து கின்றனர். மேலும்  மேலூரில் உள்ள வல்லூர் குடியிருப்பு முகாமில் இருப்பவர்களும் இந்த சாலையை  பயன்படுத்துகின்றனர்.  அத்திப்பட்டு புதுநகர், அத்திபட்டு மின்வாரிய குடியிருப்பு, வல்லூர் அனல் மின் நிலையம், காட்டுப்பள்ளி கிராமத்தை சார்ந்தவர்கள் பள்ளி, கல்லூரி செல்பவர்க ளும் இந்தச் சாலையைத் தான் பயன்படுத்துகிறார்கள். சிலமாதங்களாக இந்தச் சாலையில் இரு புறங்களும் கனரக வாகனங்கள் அதிகம் நிறுத்தப்படுவதால், ஒற்றையடிப் பாதை போல் சாலை காட்சியளிக்கிறது. சாலையில் மற்ற வாகன ங்கள் செல்ல போதிய இட வசதி இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவ தாக வாகன ஒட்டிகள் கூறுகின்றனர். மேலும் கடினமான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் குறித்த நேரத்திற்கு செல்லமுடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.  எனவே  இந்தச் சாலையை இரு வழிப்பாதை யாக மாற்றி அமைப்பதோடு, சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும், பேக்குவரத்து காவலர்களைக் கொண்டு, வாகன நெரிசலை தடுக்க வேண்டும்  மாவட்ட நிர்வா கத்தை தொழிற்சங்கத் தலைவர்கள் கே. வெங்கட்டையா மற்றும் வெங்கடேசன் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.