tamilnadu

img

மாத்தூர் கிளைச் செயலாளர் தோழர் பெருமாள் அகால மரணம்

திருவள்ளூர், ஜூலை 1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தூர் கிளைச் செயலாளர் தோழர் பெருமாள் உடல்நலக் குறைவால் செவ்வாயன்று (ஜூன் 30) அகால மரணமடைந்தார். அவருக்கு வயது 32. திருத்தணி அருகே உள்ள மாத்தூர் கிளையின்  செயலாளராக பணியாற்றி வந்த தோழர் பெருமாள்,  ரத்த அழுத்த குறைவால், மூளை பாதிக்கப்பட்ட  நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தார். தோழர் பெருமாளுக்கு ஜோதி என்ற மனைவியும், நிவேதா, அபிநயா, கோபிகா என மூன்று  மகள்களும் உள்ளனர். அன்னாரின் உடலுக்கு கட்சியின் வட்டச் செயலாளர் ஏ.அப்சல்அக மது, மாவட்டக்குழு உறுப்பினர் வி.அந்தோணி உள்ளிட்டோர் மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சியின் மாவட்டச் செயலாளர்  எஸ்.கோபால் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குடும்பத்தின ருக்கு இரங்கல் தெரிவித்தார். இதனையடுத்து அவரது உடல் அடக்கம்  செய்யப்பட்டது.

;