tamilnadu

திருவள்ளூரில் ஒரே நாளில் 22 செ.மீட்டர் மழை

திருவள்ளூர், செப்.19-  திருவள்ளூரில் புதனன்று இரவு துவங்கிய மழை வியாழனன்று அதிகாலை  இடியுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.  இதனால் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்  மின் இணைப்பு துண்டிக்க ப்பட்டது. பலத்த மழை காரண மாக மணவாளநகர், கபிலர் நகர் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதியில் கழிவு நீருடன் மழைநீர் கலந்து வீடு களுக்குள் புகுந்தது. ராஜாஜி புரம் சிவா விஷ்ணுகோவில் தெருவில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போல் கடம்பத்தூர் ஒன்றியம் கன்னியம்மாள் நகரில் 100க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை மழை நீர்சூழ்ந்தது.  திருவள்ளூர் புங்கத்தூர் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மாணவர்கள் உள்ளே செல்லாமல் அச்சத்துடன் வெளியே நின்றிருந்தனர். தொடர்மழை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ள்ளது. இறையூர்- ராஜபாளை யம் இடையே கொசஸ்தலை ஆற்றின் நடுவில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் பத்துக்கும் மேற்பட்ட கிராமத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது பொன்னேரி - பழவேற்காடு நெடுஞ்சாலை திருவாயாபாடி ரயில்வே பாலத்தின் கீழ் தொடர் மழையால் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. தகவல் அறிந்த தும் அங்கு வந்த பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார் உத்தர வின்படி மின் மோட்டார் மூலம் மழை நீர் அகற்ற ப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட த்தில் அதிகபட்சமாக 22 செ.மீட்டர் மழையும், பூண்டியில் 20 செ.மீட்டரும் மழை கொட்டி தீர்த்துள்ளது. மாமல்லபுரம் பகுதிக ளில் வியாழனன்று அதிகாலையில் சாரல் மழை பெய்ததால், குறைவான மீனவர்களே கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.