திருவள்ளூர், பிப்.13- திருவள்ளுர் மாவட்டத் தில் துப்புரவு பணியாளர்க ளுக்கு, அடிப்படை வசதிகள் முழுமையாக மேற்கொள்ள ப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் திருவேற்காடு நகராட்சியில் வியாழனன்று (பிப்.13) நடை பெற்றது. இதில் துப்புரவு பணியாளர்களின் மறு வாழ்வு தேசிய ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹர்மேனி கலந்து கொண் டார். பின்னர் அவர் செய் தியாளர்களிடம் கூறிய தாவது:- திருவள்ளூர் மாவட்டத் தில் ஆவடி மாநகராட்சி, திரு வள்ளூர், திருத்தணி, திரு வேற்காடு மற்றும் பூவிருந்த வல்லி ஆகிய 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள் மற்றும் 526 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் அனைத்து துப்புரவு பணி யாளர்களுக்கும் சம்பந்தப் பட்ட அலுவலர்கள் வாயி லாக தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து வழங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும் அலுவலர்கள் மீது அரசுக்கு நடவடிக்கை எடுப்ப தற்கு பரிந்துரைக்கப்படும். மேலும், துப்புரவு தொழிலாளர்களை அரசின் உரிய அனுமதி இல்லாமல் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணிகளில் ஈடுபடுத்தும் தனியார் மீதும் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப் பட்டு, சட்ட ரீதியான நட வடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் தனியார் துப்புரவு பணிகளில் ஈடுபடும் நபர்கள் தங்களை தாங்களே பதிவு செய்துக்கொண்டு பணிகளில் ஈடுபட உரிய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறி னார். இக்கூட்டத்தில் திரு ள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் வித்யா, காவல்துறை உதவி ஆணையர் (பூவிருந்த வல்லி) திரு.செம்பேடு பாபு, அனைத்து நகராட்சி ஆணை யர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.