tamilnadu

பழவேற்காடு மார்க்கெட் பகுதியில் மதுக்கடையால் மக்கள் அவதி நடவடிக்கை எடுக்க பொது மக்கள் புகார்

திருவள்ளூர், ஜூலை 26-  பழவேற்காடு மார்க்கெட் பகுதியில் மதுக்கடை யால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஊராட்சிக் குட்பட்ட கிராமப் பகுதிகளில் கொரோனா வேகமாக  பரவி வருகிறது. இனையொட்டி ஊராட்சி மன்றத்தின்  சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பழவேற்காடு பகுதியில் தொற்று ஏற்பட  காரணமாக இருக்கும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்து வதற்கு ஆலோசிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் தனிமனி விலகளை பின் பற்றுவது, முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கவும், காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும்  மார்க்கெட் பகுதியில் கடைகள் இயங்கவும் தீர்மா னம் இயற்றப்பட்டது. பழவேற்காடு சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா, பான்,  குட்கா போன்ற போதை வஸ்துகள் அதிகம் புழக்கத்  தில் இருப்பதாகவும், இவற்றை தடுப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பழவேற்காடு மது பான கடைக்கு வருவோர், குடித்துவிட்டு அந்த வழியாக  செல்லும் பெண்கள், பொதுமக்களிடம் அத்துமீறுவ தாகவும், சாலையில் பாட்டில்களை உடைத்து போடு வதாகவும் பெண்கள் புகார் தெரிவித்தனர். மது பானக்கடை குறித்து உரிய அதிகாரிகளிடம் புகார் அளிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சரவணன் தலை மையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் தேசராணி தேசப்பன், வார்டு உறுப்பினர்  கள் மற்றும் கிராம நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.