tamilnadu

இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்

தமிழ்நாடு மாநிலம் திருவள்ளூர் அருகே கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் (பாக்மதி சூப்பர் பாஸ்ட் - 12578) மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 பெட்டி கள் தடம்புரண்ட நிலையில், படுகாயம் அடைந்த 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலை யில், கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ஒன்றிய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகையில், “மைசூரு - தர்பங்கா ரயில் விபத்து பாலா சோர் (ஒடிஷா) விபத்தின் கோரத்தை நினைவூட்டுகிறது. ஒரு பயணிகள் ரயில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி யுள்ளது. ஏற்கெனவே இது போன்ற விபத்துகளில் நிறைய உயிர்ப் பலிகள் ஏற்பட்டுவிட்டன. அவற்றிலிருந்து கற்றுக் கொள்ளப்பட்ட பாடம் என்ன? பொறுப் பேற்பு மேலிருந்தே தொடங்க வேண்டும். அரசு விழித்துக் கொள்ளும் முன்னர் இன்னும் எத்தனை குடும்பங்கள் இதுபோன்று அழிய வேண்டும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.