tamilnadu

குழந்தை தொழிலாளர்களை கண்டறிய கடைகள், உணவகங்களில் ஆய்வு

திருவள்ளூர், ஜூன் 6-கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள்தற்போது திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளி செல்லும் குழந்தைகள் தொழிலாளர்கள் யாரேனும் பள்ளிக்குச் செல்லாமல் கடைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனரா? என்று கண்டறிய மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி குழந்தை தொழிலாளர் அமலாக்கப்பிரிவுக்கு உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து திருவள்ளூர் தொழிலாளர் அமலாக்க உதவி ஆணையர் வளர்மதி தலைமையில் திருவள்ளூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ், ரவிக்குமார், ராஜகோபால், வெங்கடாசலபதி, சுபாஷ் சந்திரன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.அவர்கள் திருவள்ளூர் நகரத்தில் குழந்தை தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்களா? என்று கடைகள், உணவு நிறுவனங்கள், ஆட்டோ மொபைல், ஒர்க்ஷாப் ஆகியவற்றில் திடீர் சோதனை நடத்தினார்கள்.18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தை தொழிலாளர்களை யாரேனும் பணியமர்த்தினால் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் அளிக்கப்படும் என தொழிலாளர் நலத்துறைஅதிகாரிகள் கடைகள் - நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.இதுதொடர்பாக புகார் அளிக்கும் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். இலவச தொலை பேசி எண்: 1098, மற்றும் 044-2766 5595, 99406 45043 ஆகிய எண்களைதொடர்பு கொண்டு புகார் செய்யலாம்.