tamilnadu

வரதட்சணை கொலையா?

திருவள்ளூர் ஜூன் 17- திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு மரணமடைந்தார். இது வரதட்சணை கொலை என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  வேணாடு நாடு கிராமத்தைச் சேர்ந்த சந்தியாவுக்கும் (26), கவரப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபனுக்கும் (30) ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது சந்தியாவிற்கு அவரது பெற்றோர் 20 சவரன் நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை சீதனமாக கொடுத்துள்ளனர். மாமியார் வீட்டிலிருந்து சீதனமாக வந்த நகைகளை விற்று பார்த்திபன் ஊதாரித்தனமாக செலவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், வரதட்சனை வாங்கி வருமாறு சந்தியாவை பார்த்திபன் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சந்தியா தூக்கிட்ட நிலையில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே வரதட்சனை கேட்டு பார்த்திபன் கொலை செய்ததாக சந்தியாவின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.