tamilnadu

img

பொதுத்துறைகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஜூலை 15- ரயில்வே துறையை தனி யார் மயமாக்குவதைக் கண்டித்து  வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரி  ரயில்வே நிலையம் எதிரில் பிர தேச தலைவர் ஆனந்த் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செயலாளர் சரவ ணன், பொருளாளர் பாஸ்கர், மாண வர் சங்கத் தலைவர் ஜெயபிர காஷ் செயலாளர் விண்ணரசன், நிர்வாகிகள் வினோத்,  சஞ்சய்,  ராஜ்குமார், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் உளுந்தூர்பேட்டை, சின்னசேலம் ரயில் நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் எம்.கே.பழனி, செயலாளர் வே.ஏழு மலை, பொருளாளர் வி.மார்த் தாண்டன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் செல்வராஜ், சுபாஷினி  உள்  ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிதம்பரம் தலைமை தபால்  நிலையம் அருகே நகரச் செயலா ளர் கோபால் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் துணைத்  தலைவர் ராஜராஜன் புவனகிரி  ஒன்றிய செயலாளர் சதீஷ், சிதம்ப ரம் நகர் குழு உறுப்பினர் மேத்யூ, மாணவர் சங்க மாவட்ட துணை தலைவர் லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பரங்கிப்பேட்டையில் ஒன்றியச் செயலாளர் ஆழ்வார் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.