tamilnadu

img

திருவள்ளூர் அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலி...முன்னதாக செய்த சாகசம்-வைரலாகும் வீடியோ!  

திருவள்ளூர் அருகே 19 வயதான கல்லூரி மாணவர் தனது சக நண்பர்களுடன் ஓடும் ரயிலில் ஏறி சாகசம் செய்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

திருவள்ளூர் அருகே திருவாலங்காடு அடுத்த ஓரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அடைக்கலம் மகன் நீதிதேவன்(19). இவர் சென்னை மாநில கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.  

இந்தநிலையில், மாணவர் வழக்கம்போல வியாழக்கிழமை மாலை வேளச்சேரி-அரக்கோணம் செல்லும் புறநகர் ரயிலில் படியில் தொங்கியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது வேப்பம்பட்டு-செவ்வாப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த இவர், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தநிலையில், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக அந்த மாணவர் தனது சக நண்பர்களுடன் ஓடும் ரயிலில் சாகசம் செய்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாணவர்கள் பேருந்து, ரயிலில் சாகசம் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

;