திருவள்ளூர் மார்ச் 15- திருவள்ளூர் அருகே சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் கேமரா சேவையை காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தொடங்கி வைத்தார், திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10. லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா சேவையை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அரவிந்த் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், குற்றச் செயல்களை தடுக்க குடியி ருப்பு பகுதிகளிலும், வணிக நிறுவனங்களிலும் கண் காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். சிசி டிவி கேமரா மூலம் குற்றவாளிகளை எளிதில் பிடிக்க வாய்ப்புள்ளது என்றார். இதில் சட்டமன்ற உறுப்பினர் பலராமன், கூடுதல் துணை கண்காணிப்பாளர் பவுன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று ஆத்தூர் பகுதியிலும் கண்காணிப்பு கேமரா சேவை தொடங்கி வைக்கப்பட்டது.