tamilnadu

தடுப்புச் சுவரில் கார் மோதி 2 பேர் பலி

 

திருவள்ளூர், ஜன. 16-  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வியாழனன்று (ஜன. 16) காலை சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்று கொண்டிருந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் காரை ஓட்டி வந்த பிபீன்,  அவரது நண்பர் யுகேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானர்கள். மேலும் விபத்தில் காயமடைந்த யுவராஜ், சித்திக் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்த சிப்காட் காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;