tamilnadu

img

பாக்கித் தொகை கேட்டு கரும்பு விவசாயிகள் போராட்டம்

திருவள்ளூர், செப். 9-  தனியார் மீன்வளக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள்  வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழத்தின் கீழ் பொன்னேரியில் மீன்வளக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் திங்களன்று (செப்.9) வகுப்புகளை புறக்கணித்து  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டம் குறித்து கல்லூரி மாணவர்கள் கூறுகையில் ‘கன்னியாகுமரி யில், தனியார் சுயநிதி மீன்வளக் கல்லூரி புதியதாக துவங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இதனால் மீன்வளப் படிப்பு பாதிக்கப்படும். மேலும் பணம் கொடுத்து பட்டம் வாங்கும் நிலை உருவாகம். எனவே  தனியார் சுயநிதி மீன்வளக் கல்லூ ரிக்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இது குறித்து கேள்வி  எழுப்பிய 11 மாணவர்களை தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. இதை உடனே திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம்’ என்றனர். 

;