tamilnadu

ஆதிதிராவிட மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க  ரூ. 20 லட்சம் கல்விக் கடன்  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

திருவள்ளூர் மார்ச் 14- தாட்கோ மூலம் தேசியப் பட்டியல் இனத்தோர் நிதி மற்றும் மேம்பாட்டுக்  கழக திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட மாணவ, மாணவியர் பட்டப்படிப்பு,  தொழில் சார்ந்த தொழில் நுட்ப படிப்பு முதுநிலை படிப்பு இந்தியா விற்குள் படிப்பதற்கு ரூ.10 இலட்சமும், வெளிநாட்டில் படிக்க ரூ.20 இலட்சமும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பத்தை தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம். அல்லது https://nsfdc.nic.in/uploadedfiles/other/form/education-loan.pdf என்ற இணையதள முகவரியில் பதி விறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் குடும்ப அட்டை, சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,  கல்விக் கட்டண விவரம், கல்வித் தகுதி சான்றிதழ், ஆதார் அட்டை,  சாதிச் சான்று, வருமானச் சான்று, பாஸ்போர்ட் மற்றும் விசா (வெளி நாட்டிற்குச் சென்று படிப்பதற்கு மட்டும்) ஆகியவற்றை இணைக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்  டும்.  விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும் கடன் 5 ஆண்டுகளில் திரும்பச்  செலுத்தப்பட வேண்டும். ஒரு விண்ணப்பதாரர் பட்டயம், பட்டப்படிப்பு,  முதுகலைப் பட்டப்படிப்பு ஆகிய ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே கல்விக் கடன் பெற இயலும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.