ஊத்துக்கோட்டை, ஜூன் 2ஊத்துக்கோட்டையில் ஆட்டோவில் வந்து மோட்டார் சைக்கிள் திருடிய அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.ஊத்துக்கோட்டை ரெட்டித் தெருவை சேர்ந்தவர் குமரவேல். தி.மு.க. முன்னாள் நகர செயலாளர். இவர் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அங்குள்ள குளிர்பான கடைக்கு சென்றார். அப்போது அங்கு ஆட்டோ ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 3 பேர் கும்பல் குமரவேலுவின் மோட்டார் சைக்கிளை ஆட்டோவில் தூக்கி வைத்து கொண்டு சென்னை நோக்கி புறப்பட்டனர்.இதை கண்டு திடுக்கிட்ட குமரவேல் கூச்சலிட்டார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் சர்ச் தெருவுக்குள் சென்ற ஆட்டோவை மடக்கி பிடித்து அதில் இருந்த 3 வாலிபர்களை கைது செய்தனர்.அவர்கள் அம்பத்தூர் குளத்துக்கரை தெருவை சேர்ந்த முருகன், ராஜேஷ், அவரது தம்பி நந்தகுமார் என்பது தெரிய வந்தது. அவர்களை ஊத்துக்கோட்டை கோர்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.