திருவள்ளூர் மாவட்டம் மணலி அருகே உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணலி அருகே உள்ள சிப்காட் பகுதியில் பழைய டயர்களை மறுசுழற்சி செய்யும் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று பிற்பகலில் எதிர்பாராத விதமாக டயர் கிடங்கில் தீ பற்றியது. இதைத்தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து தீ விபத்துக்கான காரணம் குறித்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.