tamilnadu

90 லட்ச ரூபாய் பறிமுதல் ஹவாலா பணமா?

 திருவள்ளூர்,மார்ச் 11- திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏளாகூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடி வழியாக வாகனங்களில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் புதனன்று (மார்ச் 11)  வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.  அப்போது விஜயவாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்றை நிறுத்தி சோதனையிட்டபோது சாம்பசிவ ராவ் என்ற பயணி கொண்டு வந்த இரண்டு பைகளை ஆய்வு செய்தபோது அதில் கத்தை கத்தையாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.   இதனையடுத்து 90 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த ஆரம்பாக்கம் காவல்துறையினர் இதுகுறித்து வருமான வரித் துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக கொண்டுவரப்பட்ட ஹவாலா பணமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.