tamilnadu

வெளிமாநில தொழிலாளர்கள் 50,000 பேருக்கு ஊதியம் இல்லை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

திருவள்ளூர், மே 6- திருவள்ளூர் மாவட்டத்தில் ஊதி யம் கிடைக்காமல் வெளிமாநிலத் தொழிலாளர்கள் திண்டாடி வருகின்ற னர். கொரோனா தொற்று பாதிப்பால் திருவள்ளூர் மாவட்டம் சிவப்பு மண்டல பட்டியலில் இருக்கிறது. சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வு  வழங்காத நிலையில், பல தொழிற் சாலைகள் இயங்குவதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்.  அரசு ஆணை 152ன்படி அத்தியா வசியப் பணி என்று கருதப்படும் தொழிற்சாலைகளை மட்டும் திறப்ப தற்கும், செயல்படுவதற்கும் அனுமதி  அளிக்க வேண்டும். குறைவனான தொழிலாளர்களை வைத்து வேலை செய்யவும், சமூக இடைவெளி கடை பிடித்தல் அவசியம் என்றும் வலி யுறுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.  ஆனால், அத்தியாவசிய பணிக் கான பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அல்லாத  தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தனி யார் நிறுவனங்கள் தவறான தக வல்களை அளித்து அனுமதி பெற் றுள்ளதையும், தொழிற்சாலைகள் சமூக இடைவெளி இல்லாமல் பணி யாற்றும் நிலையையும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு சிஐடியு கொண்டு சென்றுள்ளது. தொழிற்சாலை திறப்பதற்கு அனுமதி கொடுக்கிற மாவட்ட நிர்வா கம், பீடித் தொழிலாளர்கள் பீடிகளை  எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கி றது.  கட்டுமான பணிகளுக்கு அரசு  அனுமதி அளித்துள்ளது. ஆனால் காவல்துறை கட்டுமானத் தொழி லாளர்களை அனுமதி இல்லாமல் வெளியில் வரக்கூடாது என்கின்றது. அரசு உத்தரவை அமல்படுத்துவதில் பெரும் தொய்வு உள்ளது. பல தொழிற்சாலைகளில் மார்ச்  23 -31 வரை காலத்திற்கான ஊதியம்  வழங்காதது குறித்து மாவட்ட ஆட்சி யர், தொழிலாளர் ஆணையாளர், இணை இயக்குநர்கள் (தொழிற் சாலை) கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஊரடங்கு காலத்தில் பணிக்கு வரவேண்டாம் என்று நிர்வாகம் அறிவித்த தொழி லாளர்களுக்கு ஊதியம்  வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டி ருந்தும் ஊதியம் வழங்கப்பட வில்லை.

வடசென்னை அனல் மின்நிலைய  கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு  வரும் வெளி மாநிலத் தொழிலாளர்க ளுக்கு ஊதியம் வழங்காமல் உள்ள னர். வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களது ஊருக்கு செல்ல அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வரு கின்றனர். தமிழக அரசானது அரசு நலவாரி யங்கள் மூலம் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கு கிறது. திருவள்ளூர், பூந்தமல்லி, திருத்தனி பகுதிகளில் உரிய ஆவ ணங்கள் நலவாரிய அலுவலகத்தில் அளித்திருந்த போதிலும் நிவாரணம் கிடைக்கவில்லை. வங்கி கணக்கு இல்லாத தொழிலாளர்கள் தற்போ தைய நிலையில் கணக்கு துவங்கு வது சாத்தியமில்லை. நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக அரசு  அறிவித்தது. ஆனால் நடைமுறை யில் கார்டு புதுப்பித்தல் செய்த தொழி லாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படு கின்றது. பதிவை புதுப்பிக்க தவறிய  தொழிலாளர்களுக்கும் நிவாரணம்  வழங்க வேண்டும்.

விசைத்தறி, தையல் உடலுழைப்பு தொழிலாளர்க ளுக்கு கிடைக்காத நிலை உள்ளது. அரசு அறிவித்துள்ள நலவாரிய  நிவாரணப்பலன்களை உடலு ழைப்பு தொழிலாளர்களுக்கு அனை வருக்கும் கிடைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும். தற்போது இயங்கு வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் சமூக இடை வெளி கடைபிடிப்பதை பாரபட்ச மில்லாமல் செயல்படுத்த  நடை முறையை எடுக்க வேண்டும்.  மீஞ்சூர் பகுதியில் மட்டும் சுமார் 8 ஆயிரம் வெளி மாநில தொழி லாளர்கள் பணியாற்றி வருவதாக  பொன்னேரி வட்டாச்சியரே குறிப்பிட்டுள்ளார். மாவட்டம் முழு வதும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளி மாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் சரிபாதி பேருக்கு மார்ச்  23ந் தேதி யிலிருந்து ஊதியம் வழங்கவில்லை. இதில் மாவட்ட ஆட்சியர் உடனடி யாக கவனம் செலுத்த வேண்டும் இவ்வாறு சிஐடியு திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கே.விஜயன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து  முதல்வருக்கும் கடிதம் அனுப்பி யுள்ளார்.