tamilnadu

img

மோடி அரசு மக்களை வஞ்சிக்கிறது..... சத்தியாகிரகத்தில் பங்கேற்ற பாஜக கவுன்சிலர்

திருவனந்தபுரம்:
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக சிபிஎம் நடத்திய சத்தியாகிரகப் போராட்டத்தில் தலைநகர் திருவனந்தபுரத்தில் பங்கேற்ற பாஜக கவுன்சிலர் மோடி அரசு மக்களை வஞ்சிக்கிறது என குற்றம் சாட்டினார்.திருவனந்தபுரம் மாநகராட்சியின் பால்குளங்கரை வார்டு பாஜக கவுன்சிலர் விஜயகுமாரி. இவர் ஞாயிறன்று மத்திய அரசுக்கு எதிராக சிபிஎம் நடத்திய சத்தியாகிரகத்தில் குடும்பத்தினருடன் பங்கேற்றார். அப்போது அவர், பாஜகவும் மோடி அரசும் நாட்டையும் மக்களையும் வஞ்சிக்கிறது என செய்தியாளர்களிடம் கூறினார். நாட்டை வஞ்சித்த பாஜகவுடன் செல்ல மனசாட்சி உள்ள யாராலும் முடியாது என்றும் தெரிவித்தார்.

;