திருவண்ணாமலை,மே 9-கை, கால்கள் செயல்படாமல் வறுமையில் வாடும் பெண், தன்னுடைய வாழ்வாதாரத்தைக் காக்க கோரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டத்தில் உள்ளது காம் பட்டு கிராமம். இங்கு வசிக்கும் கூலித் தொழிலாளி ஏழமலை – ஜீவா ஆகியோரின் மகள் அரிபிரியா (19). இவர் கை,கால்கள் செயல் படாமல் மாற்றுத்திறனாளியாக உள்ளார். இவர் புதன் அன்று மாவட்ட ஆட்சியருக்கு ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது:-எனக்கு இரு கை, கால்களும் செயல்படாமல் உள் ளது. நடக்கமுடியாத நிலையில், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள் ளேன். நான் இருக்கும் இடத்தை விட்டு பிறர் உதவியில்லாமல் அசையமுடியாது. எனது தந்தை பெயர் ஏழுமலை. கூலி வேலை செய்து வருகிறார். எனது தாயார் பெயர் ஜீவா(35). ஏழ்மை நிலையில் வசித்துவரும் எங்கள் குடும்பத்தில், என்னைக் கவனித்துக் கொள் வதே, என் தந்தைக்கும் தாய்க்கும் வேலையாக உள்ளது.என்னைப் பராமரிக்கும் பணியே என் பெற்றோர்கள் இருவருக்கும் இருப்பதால், கூலி வேலைக்குக் கூட, வெளியில் செல்லமுடியாத நிலையில் தவித்து வருகின்றனர். அன்றாட செலவுகளுக்கே, அக்கம்பக்கம் உள்ளவர்களை அணுகவேண்டிய நிலையில் உள்ளனர். எனது தாயார் ஜீவா 5 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளம் பேரிடரில் எனது தாயார் ஜீவாவின் அசல் சான்றிதழ்கள் அனைத்து சேதமடைந்துவிட்டது. எனது தாயாருக்குச் சத்துணவு மைய உதவியாளர் பணி வழங்கினால், என்னைப் பராமரிக்க ஏதுவாக இருக்கும் என்று கோரிக்கை வைத்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு, கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி கருணை மனு அளித்தேன். எனக்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. எங்கள் குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எங்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் விதமாக எனது தாய் ஜீவாவிற்கு, சத்துணவு மையத்தில் உதவியாளர் பணி, அல்லது வேறு ஏதேனும் பணி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.