திருவண்ணாமலை, ஆக. 20- திருவண்ணாமலை அருகே கிணற்றில் மண்சரிந்து விழுந்ததில் விவசாயி பலியானார். திருவண்ணாமலை அடுத்த பூதமங்கலம் பகுதியை சேர்ந்த வர் அண்ணாமலை(35). விவசாயியான இவருக்கு திருமண மாகி ஒரு மகளும், மகனும் உள்ளனர். இவருக்கு அந்த பகுதி யில் கிணற்றுடன் கூடிய விவசாய நிலம் உள்ளது. இவர் தனது விவசாய நிலத்திற்கு சென்றார். கிணற்றின் அருகில் சென்றபோது தொடர் மழையின் காரணமாக கிணற்றில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் அண்ணாமலை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் சந்தேக மடைந்த அவரது குடும்பத்தினர் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் கிணற்றில் விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் அண்ணாமலையின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து மங்கலம் காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.