திருவண்ணாமலை, மார்ச் 1- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்காவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, கடந்த 4 ஆண்டுகளாக நியாயவிலை கடைக ளில் அரிசி வழங்காமல் உள்ளதால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர். எனவே அவர்க ளுக்கு உடனடியாக அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு ள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச் சங்கத்தின் திரு வண்ணாமலை மாவட்டக் குழு கூட்டம் ஞாயிறன்று (மார்ச் 1) போளூரில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், மாவட்ட செயலாளர் சி.ஏ. செல்வம் மற்றும் மாவட்டக்குழு உறுப் பினர்கள் கலந்துக்கொண்ட னர். செங்கம் தாலூக்காவில் உள்ள மண்மலை, நாச்சிப் பட்டு மற்றும் காயம்பட்டு கிராமங்களில் உள்ள 100 க்கும் மேற்பட்ட, உதவித் தொகை பெறும் மாற்றுத் திறனாளிகளின் பெயர்கள் குடும்ப அட்டையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டையிலி ருந்து பெயர் நீக்கப்பட்டு, இவர்களுக்கு மாதம் 5 கிலோ அரிசி பெறும் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அட்டை வழங்கி 4 வருடங்கள் ஆகியும், இது நாள் வரை அரிசி வழங்கப்பட வில்லை. அரிசியும் வழங்கா மல், குடும்ப அட்டையிலி ருந்து பெயரும் நீக்ககப்பட்டு ள்ளது. இதனால், மாற்றுத் திறனாளிகள் சாப்பாட்டிற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். குடும்ப அட்டையில் மாற்றுத்திறனாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டது, மாற்றுத்திறனாளிகள் சட்டத்திற்கு எதிரானது. மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை வைத்தும், இது வரை நடவடிக்கை இல்லை. எனவே, நீக்கப் பட்ட பெயர்களை மீண்டும் சேர்த்து, 30 நாட்களுக்குள் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி அரிசி வழங்காத பட்சத்தில், செங்கம் தாலுக்கா அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று, மாவட்டக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.