தி.மலை,நவ.23- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபவிழா வருகிற 1 ஆம் தேதி கொடியேற்றத்து டன் தொடங்குகிறது. 10 ஆம் தேதி தீபம் ஏற்றப்படு கிறது. எனவே, பொதுமக்க ளின் வசதிக்காக திரு வண்ணாமலை நகரினை இணைக்கும் 9 சந்திப்பு சாலைகளிலும் 2420 பேருந்து கள் நிறுத்தும் வகையில் 15 தற்காலிக பேருந்து நிலை யங்கள் அமைக்கப்படுகிறது. மேலும், 85 இடங்க ளில் 24,000 கார்கள் நிறுத்து வதற்கான கார் பார்கிங் வசதி செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு இணையதளம் மூலம் செய்வ தற்கு வசதி ஏற்படுத்தப்ப ட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கார் பார்கிங் இடங்க ளில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் நடத்தப்படும் உணவகம், போலீஸ் மையம், அடிப்படை வசதிகள், கழிப்பறைகள், மின் விளக்குகள், மேற்கூரை கள், குடிநீர் வசதி செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் தமிழகம் முழுவதும் இருந்து 2,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வுள்ளது. சென்னையில் இருந்து மட்டும் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். விழுப்புரம், திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் இருந்து அதிகளவில் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதைக்கு செல்ல 125 தொடர் மினிபேருந்துகள் இயக்கப்படுகிறது. தென்னக ரயில்வே மூலம் 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் விழுப்புரம் மற்றும் வேலூர் மார்க்கமாக 650 கூடுதல் சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளது. மக்களின் வசதிக்காக 600 கழிப்பறைகள், 400 தற்காலிக சிறுநீர் கழிக்கும் இடங்கள், திருவண்ணா மலை நகரத்தை இணை க்கும் 9 சந்திப்பு சாலைகளில் 42 இடங்களில் குளிக்கும் அறைகள் மற்றும் கழிப்பறை வசதியுடன் ஏற்பாடு செய்யப்படுகிறது.
மதுக் கடைகள் மூடல்
தீபவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுக்டைகள் டிச 1 முதல் டிச 10 ஆம் தேதிவரை மூடப்பட்டிருக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.