tamilnadu

சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறுவன் மீது போக்சோ சட்டம்

திருவண்ணாமலை, மார்ச் 2- திருவண்ணாமலை மாவட்டம் தச்சம் பட்டு அருகே விளையாடிப் கொண்டிருந்த 4  வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை காவல்துறையினர் கைது  செய்தனர். விளையாடிப் கொண்டிருந்த சிறுமியை, அவளது உறவினர் மகனான 16 வயது சிறு வன் மறைவான இடத்திற்கு அழைத்துப் சென்று பாலியல் தொல்லை செய்ததாகக் கூறப்படுகிறது. சிறுமியின் அழுகுரல் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் வருவ தைக் கண்ட சிறுவன் ஒரு இடத்தில் பதுங்கிப்  கொண்டான். இதையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து தச்சம்பட்டு காவல்நிலை யத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காவல்துறையினர் கண்டு கொள்ளவில்லை. இதற்கிடையில், அச் சிறு வனை பிடித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.  பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் உற வினர்கள் மகளிர் காவல் நிலையம் முன்பு  முற்றுகையிட்டதைத் தொடர்ந்து அந்த பெண் குழந்தையின் பெற்றோரிடம் புகாரை பெற்ற காவல்துறையினர், சிறுவனை, போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்துள்ளனர்.