திருவண்ணாமலை பெரிய தெருவில் உள்ள திருக்குறிப்பு கொண்ட நாயனார் திருமண மண்டபத்தில் வியாழனன்று (ஜூலை 2) நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இந்த விழாவில் உற்றார் உறவினர், நண்பர்கள் என ஏராளமானோர் குவிந்தனர். இதனையறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அனைவரையும் வெறியேற்றி மண்டபத்திற்கு சீல் வைத்தனர். இதேபோன்று வேங்கிக்கால் புதூரில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்ற கிருஷ்ண மஹாலுக்கும் காவல்துறையினர் சீல் வைத்தனர்.