திருவண்ணாமலை,செப்.21- ஊரகவளர்ச்சித்தறை அலுவலர்கள் சங்க திருவண்ணாமலை மாவட்ட மையம் சார்பில் 33ஆவது அமைப்பு தின விழா சேத்துப் பட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 50 பேர் ரத்த தானம் செய்தனர். முடிவில் நடை பெற்ற அமைப்பு தின விழாவிற்கு மாவட்டத் தலைவர் மு. பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நா.முத்துவேல் வர வேற்றார். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சி.சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ச.பாரி, மாநிலத் துணைத் தலைவர் சார்லஸ் சசிகுமார் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர் பெரணமல்லூர் சேகரன் நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் எஸ். முரளி நன்றி கூறினார். இந் நிகழ்வில் மாவட்டம் முழுவதுமிருந்து ஊராட்சி செயலாளர் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர் வரை அனைவரும் கலந்து கொண்டனர்.