tamilnadu

img

பெண் சடலத்துடன் உறவினர்கள் மறியல்

திருவண்ணாமலை, ஜூலை 15- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அந்தனூர் மதுரா  கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தர்ம லிங்கம் . இவரது மனைவி சுதர்சனா (42). இவர்களுக்கு தங்கராஜ், விஜ ராஜ் என 2 மகன்கள் உள்ளனர். தங்கராஜ்  சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். விஜயராஜ் பி.காம் முடித்துள்ளார். இந்நிலையில் தர்மலிங்கத்துக்கும், அவரது சகோதரர் ஆறுமுகத்துக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக மேல்செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சுதர்சனாவின் மகன் விஜய ராஜ், கணவர் தர்மலிங்கம், சகோதரர் முனிராஜ் ஆகியோரிடம் காவல் துறை யினர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்ததாக தெரிகிறது. இந்த தகராறில் சுதர்சனாவின் மக னுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும்,  அவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக  சுதர்சனா கூறினார்.

படிக்கும் மகனின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விட்டதே என்றும் அவர்  வருத்தத்தில் இருந்துள்ளார்.  இது குறித்து நியாயம் கேட்க மேல்செங்கம் காவல் நிலையத்திற்கு சுதர்சனா சென்ற தாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பெண் காவலர் ஒருவர் சுதர்சனாவின் வீட்டுக்கு சென்று அவரது சகோதரர் முனிராஜிடம் சுதர்சனா விஷம் குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுதர்சனா,  சிகிச்சை பல னின்றி  திங்களன்று உயிரிழந்தார்.  இத னால்  ஆத்திரமடைந்த சுதர்சனாவின் உற வினர்கள் காவல் துறையினர்தான்  சுதர்ச னாவை தற்கொலைக்கு தூண்டியதாக வும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மருத்துவமனை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல்  அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத்  தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பிரேத பரிசோத னைக்கு பின்  சுதர்சனாவின்  உடல் உற வினர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை சுதர்சனாவின் உடலுடன் செங்  கம்-பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  அங்கு வந்த காவல் துறையினர் அவர்க ளுடன் பேச்சுநடத்தினர். அப்போது சுதர்  சனாவின் உறவினர்கள், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கைது செய்யப்பட்ட 2 பேரையும் விடு தலை செய்ய வேண்டும், உயிரிழந்த வர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த னர். உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் கூறியதைத் தொடர்ந்து,  உடலை  அடக்கம் செய்ய  எடுத்துச் சென்றனர். இது குறித்து மாவட்ட காவல்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  தர்ம லிங்கம், விஜயராஜ் ஆகியோர் ஆறு முகத்துடன் தகராறு செய்து அவரை  தாக்கியதால், சட்டபப்படி காவல் நிலை யத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் சுதர்சனா அவரது வீட்டில் விஷம்  அருந்தி தற்கொலை செய்து கொண்டார். காவல் நிலையத்தில் அல்ல  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.