tamilnadu

img

பொது சொத்து அபகரிப்பு: வந்தவாசியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை,பிப்.29- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் மாமண்டூர் கிராமத்தில் அரசு புறம் போக்கு நிலம் அபகரிக்கப்படுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.   நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல், முறை கேடாக வழங்கப்பட்டுள்ள  பட்டாவை ரத்து  செய்யாமல் மெத்தனமாக உள்ள வருவாய் துறையைக் கண்டித்தும் கண்டன உரை நிகழ்த்தப்பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமண்டூர் கிளை, மாமண்டூர் கூட்டுச் சாலை கிளை சார்பில் வந்தவாசி வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு  சேட்டு, க. சண்முகம் ஆகி யோர் தலைமை தாங்கினர்.  மாவட்ட செயற் குழு உறுப்பினர்  இரா. பாரி,  தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பெ. அரிதாசு, விவசாயிகள் சங்க நிர்வாகி  ந. ராதா கிருட்டிணன் நிர்வாகிகள் கி. பால்ராஜ், இரா.  இராமகிருஷ்ணன், சு. முரளி, இரா. இராஜ சேகர்  ஆகியோர் கண்டன உரையாற்றினர்.