tamilnadu

img

மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்  

மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலையில்  ஊர்வலம்-  ஆர்ப்பாட்டம்  செவ்வாயன்று (பிப்.18) நடைபெற்றது.  சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், சிபிஐ மாவட்ட செயலாளர் வே.முத்தையன் ஆகியோர் தலைமை தாங்கினர். சிபிஎம்  மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, சிபிஐ தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன்  ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக காமராஜர் சிலையில் இருந்து நடைபெற்ற ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.