tamilnadu

img

தனியார் சர்க்கரை ஆலையிடம் இருந்து பாக்கியை ஆட்சியர் பெற்றுத்தர வேண்டும் டி.ரவீந்திரன் கோரிக்கை

திருவண்ணாமலை, பிப். 26- திருவண்ணாமலை தரணி சர்க் கரை அலை நிர்வாகம் கரும்பு விவ சாயிகளுக்கு வழகாமல் உள்ள  பாக்கி பணத்தை, மாவட்ட ஆட்சியர் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் டி.ரவீந்தி ரன் கூறினார். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் கரைப்பூண்டியில் உள்ள தரணி சர்க்கரை ஆலை கடந்த வரு டம் அரைவைப் பருவத்திற்காக விவ சாயிகளுக்கு தரவேண்டிய 26 கோடி  ரூபாய் பணத்தைத் வழங்கக் கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் போளூர் தரணி சர்க்கரை  ஆலை முன்பு கடந்த 3 நாட்களாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து செவ்வாய்க்கி ழமை கோட்டாட்சியர் உள்ளிட்ட அலு வலர்கள், சங்க பிரதிநிதிகள், ஆலை  நிர்வாகத்தினர் என முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் நிலு வைத் தொகையினை மார்ச் 31ஆம் தேதிக்குள் அளிப்பதாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால்  மார்ச் 31ஆம் தேதியிட்ட காசோலை யினை தற்போதே வழங்குமாறு விவ சாயிகள் வற்புறுத்தினர். ஆலை நிர்வாகமோ பணமாகத்தான் தரு வோம் என்றும் காசோலையாகத் தர மாட்டோம் என உறுதியாக கூறியது. இதனால் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட நடைபய ணமாக திருவண்ணாமலை நோக்கிப் புறப்பட்டனர். அவர்கள்  கரைப்பூண்டி பாலம் அருகே செல்லும்  போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். புதனன்று (பிப். 26) விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  பின்னர்  இதுகுறித்து டி.ரவீந்தி ரன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: கரும்பு அரைவை செய்யும் ஆலைகள், 14 நாட்களுக்குள் விவ சாயிகளுக்கு பணம் வழங்க வேண்டும் என்று அரசாணை உள்  ளது. ஆனால் போளூர் தரணி சர்க்  கரை ஆலை கடந்த ஒரு வருடங்க ளுக்கும் மேலாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கி பணத்தை வழங்காமல், அலைக்கழித்து வரு கிறது. தமிழகத்தில் தரணி சர்க்கரை ஆலை மூன்று இடங்களில் செயல் பட்டு வருகிறது.  இந்த மூன்று ஆலைகளிலும் 65 கோடி ரூபாய் பணம் பாக்கி உள்ளது.  அவற்றை பெற்றுத்தர மாவட்ட ஆட்சி யர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தரணி சர்க்கரை ஆலை தொடர்ந்து  இயங்க முடியாத நிலையில், அந்த  ஆலையை மாநில அரசு கைப்பற்றி நடத்த வேண்டும் என்றும் ஆட்சி யரிடம் வலியுறுத்தியுள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார். இதில் மாநில துணைத் தலை வர் ஜனார்த்தனன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் வி.சுப்பிரமணி, தலைவர் டி.கே.வெங்கடேசன், பொருளாளர் உதயகுமார்,  ஆலை மட்ட செயலா ளர் கே.பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.