tamilnadu

img

திருவண்ணாமலையில் அறிவியல் பூங்கா திறப்பு

திருவண்ணாமலை,ஜன.6- திருவண்ணாமலை மாவட்டம்  வேங்கிக்கால் கிராம ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலமாக மாநில நிதி உள்ளிட்ட திட்டங்களின் கீழ் ரூ.300 கோடி மதிப்பீட்டில் புதிய அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவியல் பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக  அமைச்சர் எஸ். பி. வேலுமணி  திறந்து வைத்து பார்வையிட்டார்.  மேலும் பள்ளி மாணவர்களின் மல்லர் கம்பம் சாகச நிகழ்ச்சியும், வீணை இசைக் கச்சேரி,கோலாட்டம், விழிப்புணர்வு நடனம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் மாநில இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித்தலை வர் கே.எஸ்.கந்தசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பி னர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த அறிவியல் பூங்காவில் எந்திர பொறியி யல், ஒளி, ஒலி, வெப்பம், இயற்பியல், உயிரியல், வான்வெளியியல் சம்மந்தனமான அறிவியல் மாதிரி உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அறிவியல் பூங்காவில் சிறப்பு அம்சமாக அரைவட்ட திறந்தவெளி அரங்கம்  அமைக்கப் பட்டுள்ளது.  இந்த திறந்தவெளி அரைவட்ட அரங்கத்தில் அறிவியல் சம்மந்தமான பொழுது போக்கு நிகழ்ச்சிகள், அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகை யில் கருத்து பட்டறைகள், பேச்சுபோட்டி மற்றும் இதர கலைநிகழ்ச்சிகள் நடத்திடவும் திட்டமிடப்பட்டு ள்ளது.  இதனை தவிர்த்து சிறார்கள், மாணவர்கள், மூத்தகுடிமக்கள் ஆகியோர் பயன்பெறும் வகையில் விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் நடைமேடை ஆகியன அமைக்கப்பட்டு தற்போது செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.