tamilnadu

img

திருவண்ணாமலை சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் கே.குமரேசன் மறைவு

தி.மலை, செப்.28-  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திரு வண்ணாமலை மாவட்ட க்குழு உறுப்பினர்  கே.கும ரேசன் சனிக்கிழமையன்று (செப்.28)  உடல்நல குறைவினால் காலமானார். அவருக்கு வயது 45. திருவண்ணாமலை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் கே.கும ரேசன். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக வும், வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.  10 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி நடத்திய பல்வேறு கட்ட போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். திருவண்ணாமலையில் கட்சியின் மாவட்டக்குழு அலு வலகத்தில் வைக்கப்பட்டி ருந்த குமரேசனின் உடலுக்கு மாவட்டச் செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.சிஐடியு, வாலிபர், மாணவர், மாதர், வழக்கறிஞர்கள்  சங்க நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.  பின்னர் திருவண்ணா மலையிலிருந்து குமரே சனின் உடல் செங்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. எங்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். குமரேசனின் இறுதி நிகழ்ச்சி ஞாயிறன்று (செப்.29)  காலை 11 மணிக்கு செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் கிரா மத்தில் நடைபெறுகிறது. குமரேசனுக்கு கண்ணா கனகவள்ளி என்ற மனைவி யும், ரோஹித் (12) என்ற மகனும் உள்ளனர்.