திருவண்ணாமலை அருகே கோயில் நுழைவு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கோயிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர்.
திருவண்ணாமலை அருகேயுள்ள தென்முடியனூர் கிராமத்தில் 80 ஆண்டுகளாக பட்டியலின மக்களுக்கு கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கோயில் பூட்டை உடைத்து பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்து சென்றார்.
அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலை யாரும் சொந்தம் கொண்டாட கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.