tamilnadu

திருவண்ணாமலை மாவட்டத்தில் குறைதீர்க்கும் முகாம்கள் ஒத்திவைப்பு

திருவண்ணாமலை, மார்ச் 17- திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நட வடிக்கைகள் தீவிரமாக நடை முறைபடுத்தப்பட்டு வருவ தாக  மாவட்ட ஆட்சியர்  க.சு கந்தசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறிய தாவது:- திருவண்ணாமலை மாவட்டத்தில் சுகாதாரத் துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,போக்குவரத்துத் துறை,தமிழ்நாடு அரசு  போக்குவரத்துக் கழகம், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை, அருள்மிகு அருணாச்சலே சுவரர் திருக்கோயில் நிர்வா கம் உட்பட பல்வேறு துறை களின் மூலமாக பேருந்து நிலையங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்கள், இரயில் நிலை யங்கள், மாவட்ட எல்லை கள், உட்பட பல்வேறு இடங்க ளில் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நட வடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து கல்வி நிறு வனங்களும் 31.03.2020 வரை மூட உத்தரவிடப்பட்டு ள்ளது. அரசுத் தேர்வுகள், கல்லூரித் தேர்வுகள் - செய்முறைத் தேர்வுகள்  மற்றும் நுழைவுத் தேர்வு கள் திட்டமிட்டபடி நடை பெறும்.  இத்தேர்வுகள் முடிவடையும் வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள் மற்றும் உறைவிடப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும். மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரி கள் தொடர்ந்து இயங்கும். மேலும், அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் 31.03.2020 வரை மூடப்பட வேண்டும் எனவும் உத்தர விடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மனு நீதி நாள் முகாம்கள் மார்ச் 31 ஆம் தேதி  வரை ரத்து செய்யப் படுகிறது. நோய்க்கான அறிகுறி உள்ள பொது மக்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.  கொரோனா வைரஸ் சம்மந்தமாக தெரிந்து கொள்ள சுகாதாரத் துறை யின் 24 மணிநேர கட்டுப் பாட்டு அறைக்கு 104,  044-29510400, 044-29510500, 9444340496 மற்றும் 8754448477 ஆகிய எண்களுக்கும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறைக்கு 04175-233141 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு அவர் கூறி னார்.