தி.மலை, பிப்.20- திருவண்ணாமலை மாவட்டத்தில் வன்கொடு மையால் உயிரிழந்த குடும் பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோ ரிக்கை மனு அளித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், மன்சுராபாத் அருந்த தியர் காலனியைச் சேர்ந்த வர் வெங்கடேசன். அருந்த திய வகுப்பை சேர்ந்த இவர், தனது வீட்டிற்கு அருகே உள்ள 70 சென்ட் நிலத்தில் பயிர் சாகுபடி செய்து வந்து ள்ளார். அந்த நிலத்திற்கு அருகே உள்ள 4 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில், அதே கிராமத்தை சேர்ந்த சாதி ஆதிக்க சத்திகள் முத்து சாமி, தனபால், தேவராஜ், கோவிந்தராஜ் ஆகியோர் அனுபவித்து வருகின்றனர். இந்த நிலங்களின் எல்லை தொடர்பாக, வெங்கடேச னுக்கும், சாதி ஆதிக்க சத்திகளுக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சனிக் கிழமை இரு தரப்பிற்கும் தகராறு அதிகமாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 5 பேர் உருட்டுக்கட்டையால் வெங்கடேசனை தாக்கி யுள்ளனர். தடுக்க வந்த அவரது மனைவி சசிகலா வையும் தாக்கியுள்ளனர். அதில் அவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். படுகொலை செய்யப் பட்டுள்ள அருந்ததிய பெண் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண் டும், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அந்த குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த நிலத்தை அவர்க ளுக்கு பட்டா வழங்க வேண் டும் என வலியுறுத்தி இது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் பி.செல்வன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன் ஆகியோர் மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.