திருவண்ணாமலை, ஜூலை 5- திருவண்ணாமலை மாவட்டம் சாத்த னூர் ஊராட்சியில் பெரும்பாலான மக்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக விவசாயிகள் உற் பத்தி செய்யும் பாலை கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்ய மறுப்பதாக விவசாயி கள் குற்றம்சாட்டி உள்ளனர்.இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பாலை கொள்முதல் செய்யக் கோரி வட்ட நிர்வாகி மகேஸ்வரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன், துணைத் தலைவர் காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பால் முழுவதையும் கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்ய வேண்டும், கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, அண்டை மாநில அரசுகள் இலவசமாக பாலை வழங்குவது போல், தமிழகத்திலும் ஏழை எளிய மக்களுக்கு, மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பாலை இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இறுதியில் கொள்முதல் செய்யாத பாலை தரையில் கொட்டி கோஷம் எழுப்பினர்.