tamilnadu

நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் சாலை மறியல்

திருவண்ணாமலை, பிப்.17- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி  மில்லத் ரோட்டில் வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு,  ஆரணி, சேவூர், இரும்பேடு, எஸ்.வி.நகரம்  உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த  விவசாயிகள் நெல், பயிறு வகைகளை விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை இலவசமாக எடை போட வேண்டும். ஆனால் அங்குள்ள ஊழியர்கள் ஒரு மூட்டை எடைபோட 8 ரூபாய் தர வேண்டும் என விவசாயிகளிடம் கட்டாய வசூ லில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. மேலும்  விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டை களை எடை போடாமலும் அறையில் வைக்கா மலும் திறந்த வெளியிலேயே வைத்துள்ள னர். இதனால் நெல் மூட்டைகள் வெயிலில் காய்ந்து எடை குறைந்து நஷ்டம் ஏற்படுகிறது. இதுகுறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையிட்டனர். ஆனால் அதி காரிகள் சரிவர பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திங்களன்று (பிப் 17) ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் வெளியே ஆரணி- வந்தவாசி சாலையில் மறியலில் ஈடு பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி நகர காவல் துறையினர், ஒழுங்குமுறை விற்பனைகூட கள ஆய்வாளர் சரவணன்  ஆகியோர் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளி டம்  பேச்சுவார்த்தை நடத்தி, நெல் கொள்முதல்  செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த னர். இதையடுத்து விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

;