tamilnadu

விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை, மார்ச் 16-  திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்  வெள்ளியன்று (மார்ச் 20)  நடைபெறு கிறது. கூட்டத்தில் வேளாண்துறை, விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்க உள்ளனர். எனவே, விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுக் கோரிக்கைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் என  மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி தெரிவித்துள்ளார்.