tamilnadu

சம்பளம் கோரி தனியார் சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஆட்சியரிடம் மனு

தி.மலை,டிச.3- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுக்கா கரைப்பூண்டியில் தனியார் தரணி சர்க்ககரை ஆலை இயங்கி வருகிகிறது.  இந்த சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்  பிய விவசாயிளுக்கு சேர வேண்டிய நிலுவைத்தொகை இந்நாள் வரை வழங் கப்படவில்லை.  கரும்பு விவசாயிகள் பலகட்ட  போராட்டங்கள்   நடத்தியும் பலனில்லை. இந்நிலையில் கரும்பு ஆலையில்  பணி புரியும் ஊழியர்களுக்கு அக்டோபர் மாத ஊதியம் இந்நாள் வரை வழங்கப்படவில்லை.  தரணி ஆலை பணியாளர்கள் பலமுறை  நிர்வாகத்திடம் முறையிட்டும், ஊதியம் வழங்கப்படவில்லை.  இதையடுத்து, திங்கள் அன்று  மாலை  தரணி சர்க்கரை ஆலை சங்கத் தலைவர்  பாலமுருகன், செயலாளர் தண்டபாணி, சிஐ டியு மாவட்ட நிர்வாகிகள் காங்கேயன், எம்.வீரபத்திரன்  மற்றும் நிர்வாகிகள் திரு வண்ணாமலை மாவட்ட ஆட்சியரை சந்தித்து,  சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு  சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி   மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர், தரணி ஆலை நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

;