கேரளாவில் வழங்கியது போல தமிழகத்திலும் நுகர்வோருக்கு மின் கட்டணத்தில் 50 விழுக்காடு மானியம் வழங்க வலியுறுத்தி திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் எம்.ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கலசபாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் எம்.பிரகலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.