சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய பிடித்தத்தைக் கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் ஆர்.ஜோதி சங்கர், நில அளவை சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜே.ராஜா, வட்ட கிளைத் தலைவர் பரிதிமால் கலைஞன், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன், வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.