திருவண்ணாமலை, மார்ச் 16- ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் பெண்களுக்கு பட்டா வழங்கக் கோரி மனு கொடுக்கும் இயக்கம் திங்க ளன்று (மார்ச் 16) நடை பெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற இயக்கத்திற்கு, டாக்டர் அம்பேத்கர் பேரவை சி.ஏழு மலை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி எம்.ரவி ஆகியோர் தலைமை தாங்கி னர். தலித் மண்ணுரிமை கூட்ட மைப்பு மாநிலத் தலைவர் சி.நிக்கோலஸ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் டி.செல்லக்கண்ணு, மாவட்டச் செயலாளர் ப.செல் வன், பொருளாளர் எஸ்.ராமதாஸ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், வட்டச் செயலாளர் கே.வெங்கடேசன், சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. பாரி, விதொச மாவட்டச் செயலாளர் எம்.பிரகல நாதன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட துணைத் தலை வர் எஸ்.அண்ணாமலை, டாக்டர் அம்பேத்கர் பேரவை மாவட்டத் தலைவர் எம்.அண்ணாதுரை, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ந.அன்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிராமங்களில் விதி மீறப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டு நிலமற்ற தலித் பெண்களுக்கு பட்டா வழங்க வேண்டும், செங்கம் வட்டம், புளியம்பட்டி கிரா மத்தில் பஞ்சமி நிலம்கேட்டு மனுகொடுத்த பெண்களுக் கும் உடனடியாக பட்டா வழங்கிட வேண்டும், கல சபாக்கம் வட்டம், வீரளூர் கிராமத்தில் விதிமீறப்பட்ட 32 ஏக்கர் பஞ்சமி நிலங்களின் பட்டாவை ரத்து செய்து, மனுகொடுத்த வீரளூர் தலித் பெண்களுக்கு உடனடியாக பட்டா வழங்கிட வேண்டும், கலசபாக்கம் வட்டம், கெங்கவரம், பெருமாபாளை யம் அரிஜன கூட்டுறவு குடியேற்ற நலச்சங்கத்தின் பயனாளிகளுக்கு சங்கத்தின் 162 ஏக்கர் பஞ்சமி நிலங் களை மீட்டு உடனடியாக பட்டா வழங்கிட வேண்டும், கலசபாக்கம் வட்டம், மட்ட வெட்டு கிராமத்தில் மனு அளித்த தலித் பெண்களுக்கு உடனடியாக 40 ஏக்கர் நிலங்களை பட்டா வழங்கிட வேண்டும், தண்டராம்பட்டு வட்டம், கடப்பன்குட்டை கிராமத்தில் இருளர் சமூக மக்களுக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் பஞ்சமி நிலங்களை பிற சமூகத்தினர் ஆக்கிரமித்துள்ளதை உடடி யாக மீட்டு இருளர் மக்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன.