மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போளூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், கி.நடராஜன், பி.செல்வன், சு.தண்டபாணி, அ.உதயகுமார் (சிபிஎம் தலைவர்கள்), பி.ஆறுமுகம், சி.நாராயணசாமி, அ.சண்முகம், இ.தங்கராஜ், சி.அ.செல்வம் (சிபிஐ தலைவர்கள்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
**************
மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் புதுவையில் அண்ணாசிலை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஆர்.விசுவநாதன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், சலீம் (சிபிஐ), சோ.பாலசுப்புரமணியன் (சிபிஐஎம்எல்) ஆகியோர் பேசினர். முன்னதாக அண்ணாசாலையில் இருந்து துவங்கிய பேரணி நேருவீதியில் முடிவடைந்தது.
**************
மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத பட்ஜெட்டை கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சின்னசேலம் பேருந்து நிலையம் அருகே மாவட்டத் தலைவர் கே.மூக்கன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் பி.சுப்பிரமணியன், செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், வட்டச் செயலாளர் பி.பழனி, பொருளாளர் சன்னியாசி, விவசாய சங்க வட்டச் செயலாளர் ஆர்.பாபு, மாதர் சங்க வட்டச் செயலாளர் எஸ்.வள்ளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
**************
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
**************