tamilnadu

img

மக்களைப் பற்றி கவலைப்படாத மத்திய அரசு: திருமா. சாடல்

சென்னை, ஏப்.17- ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணங்களை உடனடி யாக மத்திய மாநில அரசு அறிவிக்க வேண்டும் என திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவள வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் புதிய வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியிடப் பட்டிருக்கின்றன. அவற்றில் மக்களுக்கான நிவாரணம் குறித்து எந்த வொரு அறிவிப்பும் இல்லை. பேரிடர் காலத்தில் மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் நடந்துகொள்ளும் மத்திய அரசின் போக்கு அதிர்ச்சி அளிக்கி றது.

உள்துறை அமைச்சகம் வெளி யிட்டுள்ள அறிவிப் பில், பொதுமக்கள் அனை வரும் முகக்கவசம் அணிய வேண்டும்; பொது இடத்தில் எச்சில் துப்பி னால் அபராதம் போன்ற அறிவுரை களையே மீண்டும் கூறியுள்ளது. மக்கள் பட்டினி கிடந்தால் என்ன செய்வது என்ப தைப் பற்றி மத்திய அரசு சிறிதும் கவ லைப்படுவதாகத் தெரியவில்லை. பட்டினியால் செத்துவிடு வோம் எனப்பயந்து புலம்பெயர் தொழிலாளர்கள்  மும்பையிலும், சூரத்திலும் வீதியில்  இறங்கிக் குரலெழுப்பத் தொடங்கிவிட்ட னர். செவிலியர்கள் தமது பாதுகாப்புக் கான நடவடிக்கைகளை எடுக்க வலியு றுத்தி உச்சநீதி மன்றத்துக்குச் சென் றுள்ளனர்.

உலகில் மிகக்குறைவாக சோதனை செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. பத்து லட்சம் பேரில் சுமார் 150 பேருக்குத்தான் இங்கு சோதனை செய்யப்படுகி றது. பரந்துபட்ட அளவில் சோதனைகளை மேற்கொள்வதற்கு ஆர்டிபிசிஆர் உபகரணங்களும், ‘ஆன்டி  பாடி டெஸ்ட்’ ரேபிட் டெஸ்டிங் கருவிகளும்  தேவை. அவற்றை மாநில அரசுகளையும் வாங்க விடாமல் தானும் வாங்கித் தரா மல் மத்திய அரசு காலந்தாழ்த்தி வருகி றது. இதனால் நோய்த்தொற்று பரவி உயி ரிழப்புகள் அதிகரிக்கும் ஆபத்து ஏற் பட்டுள்ளது.

மத்திய அரசும் மாநில அரசும் இனி யும் காலந்தாழ்த்தாமல் மக்களைப் பாது காப்பதற்கான போதிய நிவாரண அறிவிப்பு களை வெளியிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.