அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் பணி நிரவல் மூலம் தமிழக அரசின் கல்லூரி கள் மற்றும் அலுவலகங்களுக்கு சென்றவர்கள் ஒப்பந்தம் முடிந்து மீண்டும் பல்கலைக்கழதிற்கு திரும்ப முடியால் திகைத்து வருகிறார்கள். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழ கத்தை கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு கையகப்ப டுத்தியது. 3 ஆண்டுகளுக்கு முன்பு பல்கலைக் கழக நிர்வாகம், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் நிதி சிக்கலில் தவித்தது. இதனையடுத்து பல்கலைக்கழக ஆசிரி யர்கள் மற்றும் ஊழியர்கள் 5 ஆயிரத்து 600 பேர் தமிழக அரசின் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவ லகங்களுக்கு மூன்று வருட ஒப்பந்த அடிப்படை யில் பணி நிரவல் செய்யப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில் சென்றவர்களின் பணிக்காலம் மே 11ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதனை யடுத்து அவர்களை பல்கலைக் கழகத்திற்கு திருப்பி அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இத னால் அந்த ஊழியர்கள் செய்வதறியாது உள்ள னர். இதுகுறித்து பணிநிரவல் ஊழியர்களின் நலச்சங்க நிர்வாகி பன்னீர்செல்வம் கூறுகை யில், தற்போது அரசு ஓய்வு பெறும் வயதை 59ஆக உயர்த்தி உள்ளது. அதன்படி ஊழியர்களை பணி நீட்டிப்பு செய்தால், தற்போது பணிநிரவலுக்கு சென்ற அனைத்து ஊழியர்களையும் பல்கலைக் கழகத்திற்கு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். சுழற்சி முறையில் மற்ற ஊழியர்களை பணிக்கு அனுப்ப வேண்டும் என்றார்.