tamilnadu

மரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

 திருவண்ணாமலை, மே 31- திருவண்ணாமலை மாவட்டம், சந்தவாசல் அடுத்த  கல்பட்டு கிராமத்தை சேர்ந்த வர் சேகர். இவரது மகன் விக்னேஷ் (20). இவர் சென்  னையில் உள்ள தனியார்  டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.  கொரோனா முடக்கத் தால் வேலை இல்லாத்தால், கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பி னார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (மே 31)  காலை தனது நண்பர்களு டன், அதே பகுதியில் ஏரிக்கரை மீதுள்ள பனை மரத்தின் மீது ஏறி பனங்காய் பறிக்க முயன்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி பனை மரத்திலிருந்து கீழே  விழுந்ததில் பலத்த காய மடைந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்ற னர்.  ஆனால் மருத்துவ மனைக்கு செல்லும் வழி யிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சந்தவாசல் காவல் துறையி னர் வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தி வரு கின்றனர்.

;